The temptation to quit will be greatest just before you are about to succeedJoin Us
Arrested Officials
Sub Inspector suspended 06thOct 2010-Dinakaran
PWD engineers held on graft charge
DHARMAPURI: Sleuths of Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) arrested two engineers of the Water Resources Organisation wing of Public Works Department here on Thursday.
K. Nachiappan, Deputy Superintendent of Police, DVAC, told The Hindu that the Sub-Divisional Officer of the Panchapalli Chinnar Dam Suresh and the Assistant Engineer Murugesan were arrested while accepting a bribe of Rs. 5000 from a civil contractor S. Mani of Kariyampatti village in Taluk on Thursday evening.
It was alleged that the two engineers demanded Rs. 20,000 for sanctioning a bill of Rs. 1 lakh. When Mr. Mani refused to budge their demand, the two accepted to receive Rs. 5,000.
Mr. Mani preferred a complaint to the DVAC. The sleuths caught the two red handed while receiving money from the contractor.
Both of them have been arrested and produced before the Chief Judicial Magistrate Meena Sathish who remanded them to judicial custody. They have been lodged in Dharmapuri Sub-jail.
Source: http://www.hindu.com/2010/10/01/stories/2010100153070300.htm
ஆத்தூரில் திருமண உதவித் தொகை கொடுக்க ரூ. 500 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி இன்று கைது
ஆத்தூர், செப். 30-
ஆத்தூர் யூனியன் அலுவலகத்தில் சமூக நலஅலுவலராக ஜானகி என்பவர் உள்ளார். இவரிடம் சீலியம்பட்டியை சேர்ந்த ராணி என்ற பெண் திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் ஜானகி ரூ. 500 கொடுத்தால்தான் உதவித்தொகை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
ஆனால் ராணி என்னிடம் பணம் இல்லை என்றதும் அவரின் மனு கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதையடுத்து ராணி சேலம் மாவட்ட லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி.சந்திரமவுலியிடம் புகார் செய்தார். அவர் ரசாயண பொடி தூவிய 500 ரூபாய் நோட்டை ராணியிடம் கொடுத்து பெண் அதிகாரி ஜானகியிடம் கொடுக்க சொன்னார்.
அதன்படி ராணி இன்று மதியம் ஆத்தூர் யூனியன் அலுவலகத்திற்கு சென்று ஜானகியிடம் ரூ. 500 லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜானகியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் ஆத்தூரில் உள்ள மற்ற அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
Source: http://www.maalaimalar.com/2010/09/30155809/get-rs-500-bribe-lady-officer.html
சாட்சியை கலைக்க ரூ.1 லட்சம் லஞ்சம்: மந்திரி கட்டாசுப்பிரமணிய நாயுடுவின் மகன் கைது லோக்-அயுக்தா வலையில் சிக்கினார்
பெங்களூர், அக்.1-
நில மோசடி வழக்கில் சாட்சியை கலைக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக மந்திரி கட்டா சுப்பிரமணிய நாயுடு மகனும், மாநகராட்சி கவுன்சிலருமான கட்டா ஜெகதீசை லோக்-அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
மந்திரி மகன்
கர்நாடக பா.ஜனதா அரசில் தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரியாக இருப்பவர் கட்டா சுப்பிரமணியநாயுடு. இவருடைய மகன் கட்டா ஜெகதீஷ். பெங்களூர் பெருநகர மாநகராட்சிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் கட்டா ஜெகதீஷ் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், பெங்களூர் தேவனஹள்ளியில், ரரோபேஸ் பார்க், ஐ.டி.பார்க் போன்ற தகவல் தொழில் தொழில்நுட்ப மண்டலங்களை அமைக்க கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியம் முடிவு செய்து, அதற்கான இறுதி அறிவிப்பை அந்த வாரியம் வெளியிட்டது.
நில மோசடி வழக்கு
இதற்காக தேவனஹள்ளி பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியம் கையகப்படுத்தியது. முன்னதாக கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியம் கையகப்படுத்திய 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 500 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை செய்யப்பட்ட 500 ஏக்கர் நிலத்தை மந்திரி கட்டா சுப்பிரமணி நாயுடுவின் மகனும், மாநகராட்சி கவுன்சிலருமான கட்டா ஜெகதீஷ் தனது பெயருக்கு மாற்றியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக. கர்நாடக லோக்-அயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கின் சாட்சியாக பெங்களூர் எஸ்.கே.நகரை சேர்ந்த ராமானுஜப்பா என்பவர் சேர்க்கப்பட்டார்.
சாட்சியை கலைக்க லஞ்சம்
இந்த நிலையில், ராமானுஜப்பா தனக்கு சாதகமாக நடக்க வேண்டும், லோக்-அயுக்தா போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது, என்பதற்காக அவருக்கு லஞ்சம் கொடுக்க மந்திரியின் மகன் கட்டா ஜெகதீஷ் முன்வந்ததாக லோக்-அயுக்தா போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று காலை முதல் சதாசிவநகரில் உள்ள மந்திரி மகன் கட்டா ஜெகதீசின் வீட்டை லோக்-அயுக்தா போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார்கள். அப்போது நில மோசடி வழக்கில் சாட்சியாக உள்ள ராமானுஜப்பா அந்த வீட்டிற்கு வந்தார். அவரிடம் கட்டா ஜெகதீசிற்கு நெருக்கமான குமார் என்பவர் ரூ.1 லட்சத்தை லஞ்சமாக கொடுத்தார்.
2 வழக்கில் கைது
இதைத்தொடர்ந்து, ராமானுஜப்பா மற்றும் குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் மந்திரி மகன் கட்டா ஜெகதீஷ் தனக்கு சாதகமாக நடந்து கொள்ள ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதன் காரணமாக லோக்-அயுக்தா போலீசார், மந்திரியின் மகன் கட்டா ஜெகதீஷ் மீது இந்திய தண்டனை சட்டம் 201-வது பிரிவு(சாட்சியை கலைத்தல்), மற்றும் 210-வது பிரிவு(பொது ஊழியராக இருந்து கொண்டு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல்) ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனர்.
பின்னர் லோக்-அயுக்தா போலீசார் மந்திரி கட்டா சுப்பிரமணி நாயுடுவின் மகன் கட்டா ஜெகதீசை கைது செய்தார்கள். அவரை லோக்-அயுக்தா சிறப்பு நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பெங்களூரில் மந்திரியின் மகன் ஒருவர் சாட்சியை கலைக்க லஞ்சம் கொடுத்ததாக லோக்-அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Source: http://www.dailythanthi.com/article.asp?NewsID=597501&disdate=10/1/2010&advt=2
Corruption in Central Railway Hospital - Byculla, Mumbai
CBI registered a case against Dr.Savita Gangurde, Head of nephrology department for taking commissions while placing orders for various medical equipments since 2003. She is also accused for enjoying foreign trips funded by pharma companies with whom she placed large orders for the hospitals. Her office and home premises have been raided. A special CBI court has given her conditional bail directing her to appear before the CBI Officers at CBI headquarters in Mumbai every day for a week.
(Source: Times of India, Mumbai 9th Feb, 2010 - page no. 6)
